இந்தியாவில், வரும் 2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை, 5 சதவீதம் வீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகும் ஸ்மார்ட் ஸ்மார்ட்போன்களின் பெரிய அளவில் புதிய தொழில்நுட்பங்கள் எவையும் உட்புகுத்தப்படுவதில்லை. ஏற்கணவே உள்ள அம்சங்களிலேயே சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன. இதனால், மக்கள் தற்போது வைத்திருக்கும் கைப்பேசிகளையே நீண்ட காலத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றனர். மக்கள் சராசரியாக 3 மாதங்களுக்கு ஒருமுறை புதிய கைப்பேசிகள் மாற்றப்படுவது, இனி இது 14-15 மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2020 ஆண்டிற்கான கணிக்கப்பட்ட 20 சதவீதமான ஸ்மார்ட்போன் விற்பனை, 2021 ஆம் ஆண்டில் தான் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை 5 சதவீதம் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.